ஜெஸ்ஸி ரைடர், பீட்டர்சன் இல்லாததால் கூடுதல் பொறுப்பு ஏற்பட்டிருக்கிறது:உன்முக்த் சந்த்

நியூசிலாந்தின் ஜெஸ்ஸி ரைடர் கடந்த வாரம் மதுபான விடுதி ஒன்றில் தாக்கப்பட்டு கோமா நிலைக்குப் போனார். தற்போது கோமா நிலையில் இருந்து அவர் மீண்டாலும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவர் குணமடைய மேலும் பல மாதங்கள் ஆகும் என்பதால் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக அவர் நடப்பு ஐபிஎல் 6-வது தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதேபோல் டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த பீட்டர்சனும் விளையாடவில்லை.
இந்நிலையில் கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி டேர்ட்டெவில்ஸ் அணியின் உன்முக்த் சந்த், ரைடருக்கு நேரிட்ட சம்பவம் வருத்தத்துக்குரியது. ரைடர் மற்றும் பீட்டர்சன் இருவரும் விளையாட முடியாமல் போனதால் எங்களுக்குக் கூடுதல் பொறுப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.
Story first published: Monday, April 1, 2013, 15:08 [IST]
Other articles published on Apr 1, 2013


Click it and Unblock the Notifications