ஒலிம்பிக்... ரசிகர்கள் நெஞ்சில் 'கவர்ச்சி ஈட்டி'யை எறிந்த லெரின் பிரான்கோ!

இந்த சர்வேயில் பல சுவாரஸ்யமான தகவல்கள் புதைந்துள்ளன. படித்துப் பார்த்தால் சுவாரஸ்யாமாக இருக்கிறது...
'கவர்ச்சி ஈட்டி'.
இணையதள ரசிகர்களிடையே பராகுவே நாட்டைச் சேர்ந்த ஜவாலின் துரோ எனப்படும் ஈட்டி எறியும் வீராங்கனை லெரின் பிரான்கோதான் செம ஹாட்டாக இருந்திருக்கிறார்.
இவர் வெறும் வீராங்கனை மட்டுமல்ல, அழகுப் பெண்ணும் கூட, அழகிப் போட்டியில் அமர்க்களப்படுத்தியவரும் கூட. மிஸ் யுனி்வர்சோ பராகுவே அழகிப் போட்டியில் 2வது இடத்தைப் பிடித்தவர் இந்த 'கவர்ச்சி ஈட்டி'.
சீனாக்காரன் திடமாத்தான் இருந்திருக்கான்...!
முதல் பத்து நாட்கள் நடந்த போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கம் வென்ற இங்கிலாந்து வீரர், வீராங்கனைகளில் 37 சதவீதம் பேர் கதறி அழுதனராம், அதாவது ஆனந்தக் கண்ணீர் விட்டாங்களாம். அதேபோல அமெரிக்க தரப்பில் 17 சதவீதம் பேர்தான் அழுதார்களாம். சீனாக்காரர்களின் கண்ணீர்ப் பங்கு இதில் 7 சதவீதமாகும். பரவாயில்லை, சீனாக்காரன் பெருஞ்சுவர் போல திடமாத்தான் இருந்திருக்கான்...!
பதக்கம் வாங்கி அழுது குமுறியவர்களில் பாதிப் பேர் பெண்கள்தானாம்... அதாவது ஆண்களை விட 25 சதவீதம் கூடுதலாக பெண்கள் அழுதார்களாம். அதேசமயம், எட்டு சதவீத ஆண்கள் மட்டுமே ஆனந்தக் கண்ணீர் வடித்தார்களாம்.
அதேபோல பதக்கம் வாங்கியோரில் 16 சதவீதம் பேர் பதக்கத்தை கடித்தும், முத்தமிட்டும் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதிலிருந்து என்ன தெரியுது...??
பதக்கம் வாங்க போடியத்தில் நின்றவர்களில் 44 சதவீதம் பேர் மட்டுமே தங்களது நாட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது கூடச் சேர்ந்து பாடினார்களாம்... மத்தவங்கள்ளாம் பராக்கு பார்த்துக்கிட்டிருந்தாங்க போல...!
இன்னொரு சுவாரஸ்யத்தைக் கேளுங்க.. பதக்கம் வாங்கிய இங்கிலாந்து வீரர், வீராங்கனைகளில் 66 பேர் அரசாங்கப் பள்ளிகளில் படித்தவர்களாம். 44 பேர் தனியார் பள்ளிகளில் படித்தவர்களாம்... இதிலிருந்து என்ன தெரியுது...??
வீரர், வீராங்கனைகளிலேயே ரொம்பப் பெரிய... நீளமான... கற்பனை ஸ்டாப் பெயர் கொண்டவர் என்ற பெரு்மை ஈரானைச் சேர்ந்த பளு தூக்கும் வீரர் சயீத் தான். இவரது முழுப் பெயர் சயீத் முகம்மதுபோர்க்கர்கரா.. அதாவது இவரது துணைப் பெயரில் மொத்தம் 26 எழுத்துக்கள் இருக்கிறதாம்... ஆங்கிலத்தில் மொத்தம் எத்தனை எழுத்துக்கள் உள்ளன...??!!
ஜாதகம் பாத்தாச்சாப்பா...!
இந்த ஒலிம்பிக் போட்டியைப் பார்கக வந்த இடத்தில் காதலாகி, கல்யாணம் பேசி முடித்தவர்களும் கணிசமாக உள்ளனர். அதாவது ஒரு நாளைக்கு சராசரியாக 2 பேர் காதலைச் சொல்லி கல்யாணம் பேசி முடித்துள்ளனராம். மொத்தமாக 25 ஜோடிகள் இப்படி கல்யாண வைபோகமே என்று பாட்டுப் பாடியுள்ளனர்.... ஜாதகம் பாத்தாச்சாப்பா...!
ஒலிம்பிக் பார்க் இருக்கு தெரியுமா... அதைக் கட்டுவதற்காக வானம் தோண்டியபோது நான்கு மண்டை ஓடுகள் கிடைத்ததாம். யாரு, என்ன என்ற விவரம் இதுவரை தெரியவில்லை...
ஆகஸ்ட் 7ம் தேதி செவ்வாய்க்கிழமையன்று லண்டன் மெட்ரோ ரயில்களுக்கு டிரவுசர் கிழிந்து போய் விட்டதாம். காரணம், அன்று மட்டும் 40 லட்சம் பேருக்கு மேல் ரயில்களில் பயணித்தனராம்.
எப்படியெல்லாம் உட்கார்நது சர்வே பண்ணிருக்காய்ங்க...!


Click it and Unblock the Notifications