சோம்தேவ் அசத்தல் வெற்றி - டேவிஸ் கோப்பை உலக பிரிவில் இந்தியா

இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர் தென் ஆப்ரிக்காவில் நடக்கிறது. ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலையில் இருந்தது.
நேற்று நான்காவது ஆட்டமான மாற்று ஒற்றையர் போட்டி நடந்தது. இதில் இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன், தென் ஆப்ரிக்காவின் ரிக் டி வோஸ்ட்டை எதிர்கொண்டார்.
இதில் முதல் இரண்டு செட்களையும் 3-6, 6-7 என பறிகொடுத்த சோம்தேவ் விடாமல் போராடி அடுத்த மூன்று செட்களையும் 7-6, 6-2, 6-4 என வென்றார். இறுதியில் 3-6, 6-7, 7-6, 6-2, 6-4 என்ற செட்களில் வென்றார். கிட்டத்தட்ட நாலரை மணி நேரம் இந்தப் போட்டி நடந்தது. தோல்வியுறும் நிலைக்குப் போய், சடாரென எழுந்து வீறு கொண்டு அடுத்தடுத்து 3 செட்களைப் பறித்த சோம்தேவின் ஆட்டம் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது.
மற்றொரு போட்டியில் யூகி பாம்பிரி 3-6, 6-3, 6-3 என தென் ஆப்ரிக்காவின் இயான் வான் டெர் மெர்வியை வீழ்த்தினார்.
இதையடுத்து இந்திய அணி 4-1 என்ற போட்டி கணக்கில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது. இதையடுத்து சுமார் 11 ஆண்டுகளுக்கு பிறகு டேவிஸ் கோப்பை உலக பிரிவு ஆட்டத்துக்குள் இந்தியா நுழைந்துள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:31 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications