
மே 12ம்தேதி நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டிக்குப் பின்னர் அணியை விட்டு விலகி விடுமாறு ஸ்ரீசாந்த்தை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.
ஜெய்ப்பூரில் அவர் தங்கியிருந்த ஹோட்டலை விட்டு வெளியேறுமாறும் அணி நிர்வாகம் கேட்டுக் கொண்டதாம். இது ஸ்பாட் பிக்ஸிங் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கையா என்பதை ராஜஸ்தான் ராயல்ஸ் உறுதிப்படுத்தவில்லை.ஆனால் அவரது செயல்பாடுகள் சரியில்லை என்பதைத் தொடர்ந்தே இந்தநடவடிக்கையை ராஜஸ்தான் ராயல்ஸ் எடுத்தாக அந்த அணி தரப்பில் கூறப்படுகிறது.
அணியிலிருந்து நீக்கப்பட்டதால் கோபமடைந்த ஸ்ரீசாந்த், கேப்டன் ராகுல் டிராவிடிடம் சண்டைக்குப் போனதாகவும் கூறப்படுகிறது.