மனைவியை கடத்திய கூலிப் படை-டிஎஸ்பி உடந்தை: கணவர் புகார்

பரமக்குடியைச் சேர்ந்த மன்சூர் ரகுமான் (22) தனது பக்கத்து வீட்டில் வசித்து வந்த கனிமொழி (19) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இருவரும் சென்னையில் வசித்து வந்தனர். இந் நிலையில் தனது மனைவியை கூலிப்படையினர் கடத்திச் சென்றுவிட்டதாக போலீஸ் கமிஷனரிடம் புகார் தந்துள்ளார் ரகுமான்.
அவர் தந்துள்ள புகாரில்,
எங்களது காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு இருந்தது. இதனால் திருமணத்துக்குப் பின் இருவரும் அந்தமான் சென்றுவிடேடாம். பின்னர் வழக்கறிஞர் ஒருவரின் துணையுடன் சென்னை வந்தோம்.
இங்கு வந்த பின் கூலிப்படை கும்பல் எங்களை மதுரைக்கு கடத்திச் சென்றது. அங்கு வைத்து எனது மனைவியை என்னிடமிருந்து பிரித்து விட்டனர்.
எனது உயிருக்கும், குடும்பத்தினருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதற்கு மதுரையை சேர்ந்த போலீஸ் டி.எஸ்.பி. ஒருவரும் இந்தக் கடத்தலுக்கு உடந்தையாக உள்ளார்.
எனவே இவர்கள் மீது நடவடிக்கை எடுத்து என் மனைவியை மீட்டுத் தர வேண்டும் என்று கூறியுள்ளார்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:31 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications