நாக்பூர்: இந்தியா, இலங்கை இடையிலான முதலாவது டுவென்டி 20 போட்டி இன்று நாக்பூரில் தொடங்கியது. இந்திய அணி டாஸ் வென்று முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தது. இலங்கை பேட் செய்து வருகிறது.டெஸ்ட் தொடரை முடித்து விட்டு தற்போது டுவென்டி 20 தொடருக்குள் புகுந்துள்ளன இந்தியாவும், இலங்கையும். இரு அணிகளுக்கும் இடையிலான 2 டுவென்டி 20 போட்டிகளி்ல முதல் போட்டி நாக்பூரில் இன்று நடந்தது.டாஸ் வென்ற கேப்டன் டோணி முதலில் இலங்கையை பேட் செய்யப் பணித்தார். இதையடுத்து இலங்கை பேட்டிங்கைத் தொடங்கியது.இன்றைய போட்டியில் இந்திய பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் வயிற்றுப் போக்கு காரணமாக ஆடவில்லை. அதேபோல இலங்கை அணியில் முரளீதரன் இடம் பெறவில்லை.