
காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்ட ஐபிஎல்
கடந்த மார்ச் மாதம் 29ம் தேதி திட்டமிடப்பட்டிருந்த ஐபிஎல் போட்டிகள், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, அதில் இடம்பெற்றுள்ள இந்திய மற்றும் சர்வதேச வீரர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஐபிஎல் போட்டிகளுக்காக தாங்கள் காத்திருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.

ரசிகர்கள் குஷி
இதனிடையே, ஐபிஎல் ஒத்திவைக்கப்பட்டாலும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் தொடர் பதிவுகள் மூலம் தன்னுடைய ரசிகர்களை தொடர்ந்து சிஎஸ்கே குஷிப்படுத்தி வருகிறது. கொரோனா ஊரடங்கிற்கு முன்பே, தோனி, ரெய்னா உள்ளிட்டவர்களின் பயிற்சிகள் உள்ளிட்டவற்றை பகிர்ந்து ரசிகர்களை கொள்ளை கொண்டது. தொடர்ந்து பல்வேறு பதிவுகளை போட்டு வருகிறது.

சிஎஸ்கே வீரர்கள்
தற்போது ட்ரெண்ட்டிங்கில் உள்ள ஜெண்டர் ஸ்வாப் மூலம் தன்னுடைய அணி வீரர்களை பெண்களாக மாற்றி அழகு பார்த்துள்ளது சிஎஸ்கே. அனைவரும் அழகாகத்தான் இருக்கிறார்கள். ஆனாலும் சுரேஷ் ரெய்னாவின் மனதை கவர்ந்தது என்னவோ ஷர்துல் தாக்கூர்தான். அவருடன் இணைந்து தான் வெளியில் காபி சாப்பிட ஜோடியாக போக வேண்டும் என்று அவர் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

சகோதரி கமெண்ட்
இதனிடையே, இந்த அழகிகளில் மிகவும் அழகாக, சிவப்பு லிப்ஸ்டிக்குடன், அழகான கண்களுடன் தீபக் சஹர் காணப்படுவதாக அவருடைய சகோதரி மால்ட்டி, கமெண்ட் செய்துள்ளார். ஆண்களை அழகான பெண்களாகவும், பெண்களை கம்பீரமான ஆண்களாகவும் மாற்றிக் காட்டும் இந்த ஆப், தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது. சமீபத்தில் யுஸ்வேந்திர சஹல், ரோகித் சர்மாவை பெண்ணாக மாற்றி ஆனந்தப்பட்டார்.


Click it and Unblock the Notifications