துபாய் ஓட்டப்போட்டி.. தமிழக வீரர் இரண்டாம் இடம்
துபாய்: துபாயில் நடந்த ஓட்டப் போட்டியில் தமிழக வீரர் நாகர்கோவில் அல் அலி இரண்டாம் இடம் பெற்றார்.
துபாய் சோனாப்பூர் பகுதியில் 3 கிலோ மீட்டர் மற்றும் 10 கிலோ மீட்டர் ஓட்டப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியானது துபாய் விளையாட்டு கவுன்சில் ஆதரவுடன் நடந்தது.

துபாயில் நடந்த போட்டியில் 20-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியில் 10 கிலோ மீட்டர் தூரத்தை 46 நிமிடங்களில் கடந்து இரண்டாவது இடத்தை தமிழக வீரர் சையது அலி பெற்றார். இந்த போட்டி தங்களுக்கு மன நிறைவை அளித்ததாக போட்டியில் பங்கேற்ற பலரும் தெரிவித்தனர்.
Story first published: Sunday, April 9, 2017, 1:47 [IST]
Other articles published on Apr 9, 2017


Click it and Unblock the Notifications