குர்கான்: மகளிர் ஓபன் கோல்ஃப் போட்டியில் இந்திய வீராங்கனை அதிதி அசோக் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.
டெல்லியை அடுத்து குர்கானில் மகளிர் ஓபன் கோல்ஃப் போட்டிகள் (Hero Women's Indian Open 2016) நடைபெற்றன. இதில் பல்வேறு நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான அதிதி அசோக் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இப்போட்டியில் 18 வயதாகும் பெங்களூரைச் சேர்ந்த அதிதி அசோக் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
இந்திய வீராங்கனை ஒருவர் மகளிர் ஓபன் கோல்ஃப் போட்டியில் சாம்பியன் பட்டம் பெறுவது இதுவே முதல் முறையாகும். கடந்த ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்றுத் தருவார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தார் அதிதி அசோக். ஆனாலும் பதக்கத்தை தவறிவிட்டார்.
தற்போது மகளிர் ஓபன் கோல்ஃப் போட்டியில் சாம்பியன் பட்டம் சென்று சரித்திரம் படைத்துள்ளார்.