கிளாஸ்கோ: இதுதான் தான் பங்கேற்கும் கடைசி காமன்வெல்த் போட்டித்தொடர் என்று, துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ரா தெரிவித்தார்.
பெய்ஜிங்கில் நடந்த ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் ரைபில் துப்பாக்கி சுடுதலில் தங்க பதக்கம், வென்றவர் அபினவ் பிந்த்ரா, தனி நபர் பிரிவில் இந்தியா ஒலிம்பிக்கில் பெற்ற முதல் தங்கம் அதுதான். அபினவ் தற்போது ஐந்தாவது முறைாயாக காமன்வெல்த் போட்டித்தொடரில் பங்கேற்றுள்ளார். இதுதான் தனது கடைசி காமன்வெல்த் போட்டி என்று அவர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், கோலாலம்பூரில் நடந்த காமன்வெல்த் போட்டித்தொடரில் எனது 15வது வயதில் முதன்முறையாக பங்கேற்றேன். இவ்வளவு தூரம் நான் வளர்ச்சியடைந்ததற்கு உறுதுணையாக இருந்த நண்பர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அபினவ் பிந்த்ரா தெரிவித்துள்ளார்.