சென்னை: ஒலிம்பிக் முடியப் போகுது, இன்னும் ஒரு தங்கம் கிடைக்கலை, வெள்ளி கிடைக்கலை, வெண்கலம் கூட கிடைக்கலை என்ற புலம்பல்கள் உச்சஸ்தாயியை எட்டிக் கொண்டிருக்கிறது.
ஆனால் இங்கே பாருங்கள்.. இப்படிப்பட்டவர்கள்தானே நிஜத்தில் ஒலிம்பிக் போட்டிக்குப் போயிருக்க வேண்டும். இவர்களை இங்கே பிச்சை எடுக்க வைத்து விட்டு மற்றவர்களை ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்பினால் எப்படி?
இவர்கள்தான் உண்மையான திறமையாளர்கள்... இவர்களை இப்படி ரோட்டில் சாப்பாட்டுக்கு பிச்சை எடுக்க வைக்கும் நாம்.. மெடல் கிடைக்கும் என்று ஒலிம்பிக் வளையத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தால் எப்படிக் கிடைக்கும்.?
200 சதவீதம் நியாயமான கேள்விதான்!