பார்வையளக்கிறாள்
இந்த போட்டிகளுக்கு பார்வையாளர்களாக மக்களை அனுமதிப்பது குறித்து ஆலோசனை நடக்கிறது. தொடக்க விழாவிற்கு 20000 பேர். மற்றும் தினசரி போட்டிகளுக்கு 10000 பேர் என்ற அளவில் அனுமதிக்கலாம் என்று முதல் கட்ட ஆலோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதிக்கட்ட முடிவுகள் விரைவில் எடுக்கப்படும்.
கொரோனா
கொரோனா கேஸ்கள் அதிகம் உள்ள பகுதிகளில் பார்வையாளர்கள் இதைவிட குறைவாக அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளது. இன்னொரு பக்கம் கொரோனா பரவல் காரணமாக டோக்கியோவில் ஒலிம்பிக் ஆட வரும் வீரர்கள் வீராங்கனைகளுக்கு காண்டம் அளிக்கப்படாது. எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று 1988ல் இருந்து காண்டம் அளிக்கப்பட்டு வருகிறது.
காண்டம்
சியோல் ஒலிம்பிக் இருந்து ஒலிம்பிக் ஆட வரும் வீரர்கள் வீராங்கனைகளுக்கு காண்டம் அளிக்கப்பட்டு வந்தது. தற்போது கொரோனா காலம் என்பதால், வீரர்களின் பாதுகாப்பு கருதி இந்த காண்டம் வழங்கப்படவில்லை. ஆனால் வீரர்கள் ஜப்பானை விட்டு செல்லும் நாளில், விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காண்டம் கொடுக்கப்படும்.
மது
அதே சமயம் வீரர்கள் வெளியே பாரில் மது குடிப்பதை தடுக்கும் வகையில் டோக்கியோவில் ஒலிம்பிக் நடக்கும் ஒலிம்பிக் வில்லேஜுக்குள் மது குடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வீரர்கள், வீராங்கனைகள் மது பாட்டிலை வெளியே வாங்கி,உள்ளே தங்கள் அறைக்கு கொண்டு சென்று குடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.