For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒலிம்பிக்கில் திடீர் மாற்றம்.. கொரோனா ஏற்படுத்திய தாக்கம்.. ஜப்பான் அரசு எடுத்த திடீர் முடிவு!

டோக்கியோ: ஒலிம்பிக் போட்டிகளுக்கு மிகப்பெரும் சறுக்கல்களை ஏற்படுத்தியுள்ளது கொரோனா வைரஸ்.

Recommended Video

Olympic 2021 தொடங்குவதில் சிக்கல்? Tokyoவில் Emergency! | OneIndia Tamil

ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஜூலை 23ம் தேதி முதல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவுள்ளது.

கடந்தாண்டு கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்ட இந்த போட்டிகள் தற்போது பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

உலகை அச்சுறுத்தி வரும் புதுவகை டெல்டா ப்ளஸ் கொரோனா வைரஸானது ஜப்பான் நாட்டிலும் வேகமாக பரவி வருகிறது. இதனால் ஜப்பானில் போட்டிகளை நடத்தக்கூடாது என அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். எனினும் மிகுந்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் போட்டிகளை நடத்தி முடிக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டது. மேலும் பார்வையாளர்களுக்கும் அனுமதி வழங்கியிருந்தது.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

பாதுகாப்பு ஏற்பாடுகள்

கொரோனா பாதுகாப்பு ஏற்பாடாக அயல்நாட்டு வீரர்கள் அனைவரும் டோக்கியோவிற்கு வருவதற்கு முன்பாக 2 பரிசோதனை மேற்கொண்டு அதில் நெகட்டீவ் ரிசல்ட் வந்திருக்க வேண்டும் என ஜப்பான் நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அதே போல டெல்டா ப்ளஸ் எனப்படும் புதுவகை கொரோனா பரவி வரும் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 7 நாடுகளின் வீரர்கள் டோக்கியோவிற்கு கிளம்புவதற்கு 7 நாட்களுக்கு முன்னதாக இருந்து தினந்தோறும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவசரநிலை பிரகடனம்

அவசரநிலை பிரகடனம்

இந்நிலையில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக அவசர நிலை பிரகடனம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் ஜூலை 12ம் தேதி முதல் இது ஆகஸ்ட் 22 வரை அவசர நிலை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் தான் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன.

ரசிகர்களுக்கு அனுமதியில்லை

ரசிகர்களுக்கு அனுமதியில்லை

எனவே ஒலிம்பிக்போட்டிகளில் பார்வையாளர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் சில போட்டிகளுக்கு மட்டும் குறைந்த அளவிலான ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனத்தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது முழுவதுமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட டிக்கெட்களுக்காக பார்வையாளர்களிடம் டோக்கியோ ஒலிம்பிக்கின் தலைவர் ஹஷிமோடோ மன்னிப்பு கோரியுள்ளார். அவர்களின் பணம் மீண்டும் திருப்பி கொடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

Story first published: Friday, July 9, 2021, 16:24 [IST]
Other articles published on Jul 9, 2021
English summary
Japan Implemented State of Emergency in Tokyo, Spectators banned for attending Tokyo Olympics games
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+