லக்னோ: புரோ கபடி லீக் சீசன் 5ல், பி மண்டலத்தில் உள்ள உ.பி. யோத்தா அணி, புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருந்தாலும்,தொடர்ந்து, நான்காவது போட்டியில் தோல்வியடைந்தது. நேற்று இரவு நடந்த ஆட்டத்தில், பி பிரிவில் உள்ள பெங்கால் வாரியர்ஸ் அணி 32-31 என்ற கணக்கில் வென்றது.
புரோ கபடி லீக் 5வது சீசன் போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன. இதில், பெங்கால் வாரியர்ஸ் அணியும், உ.பி. யோத்தா அணியும் மோதின.