லக்னோ: புரோ கபடி லீக், 5வது சீசனில், உ.பி., யோத்தா அணி, கடைசி நேரத்தில் வெற்றி வாய்ப்பை இழந்து, தொடர்ந்து மூன்றாவது போட்டியில் தோல்வியடைந்தது.
புரோ கபடி லீக் 5வது சீசனில், மண்டலங்களுக்கு இடையேயான போட்டிகள் நடந்து வருகின்றன.
ஏ பிரிவில் உள்ள முன்னாள் சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும், பி பிரிவில் உள்ள உ.பி., யோத்தா அணியும் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் மோதின.