டிராபிக் போலீஸ்காரர் கன்னத்தில் அறைந்த உமர் அக்மல்.. கைது

லாகூரில் இன்று இந்த சம்பவம் நடந்துள்ளது. போக்குவரத்து விதிகளை மீறும் வகையில், உமர் அக்மலின் கார் இன்று லாகூரில் வந்து கொண்டிருந்தது. இதையடுத்து பணியில் இருந்த போக்குவரத்துக் காவலர்கள் 3 பேர் காரை தடுத்து நிறுத்தினர்.
இதனால் கோபமடைந்த உமர் அக்மல் வேகாமாக காரை விட்டு இறங்கி ஒரு போலீஸ்காரரின் கன்னத்தில் அறைந்து விட்டார். அத்தோடு நில்லாமல் அவரது சீருடையையும் கிழித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால் அந்தக் காவலர் தான் தனது சட்டையை முதலில் பிடித்தார் என்று கூறியுள்ளார். ஆனால் அப்படி நடக்கவில்லை என்று பின்னர் போலீஸார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அக்மல் கைது செய்யப்பட்டார்.
Story first published: Saturday, February 1, 2014, 17:13 [IST]
Other articles published on Feb 1, 2014


Click it and Unblock the Notifications