டெல்லி: 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் கால் இறுதிக்கு அமெரிக்கா ஜெர்மனி அணிகள் முன்னேறின.
பிபா 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் முதல் முறையாக இந்தியாவில் நடக்கின்றன. இந்தியா முதல் முறையாக பங்கேற்றது.
24 அணிகள் பங்கேற்ற போட்டி, மெகா தொடர் போல் ஜவ்வாக இழுக்காமல், இப்போதுதான் ஆரம்பித்ததுபோல் உள்ளது. அதற்குள் காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டிகள் முடியும் தருவாயில் உள்ளது.
முதல் சுற்று ஆட்டங்கள் முடிந்து, 16 அணிகள் பங்கேற்றும் நாக்-அவுட் சுற்று ஆட்டங்கள் நேற்று துவங்கியது. இதில் அமெரிக்கா 5-0 என்ற கணக்கில் பராகுவே அணியையும், ஜெர்மனி 4-0 என்ற கோல் கணக்கில் கொலம்பியா அணியையும் வென்று, காலிறுதி சுற்றுக்கு முன்னேறின.
இன்று நடக்கும் ஆட்டங்களில் ஈரான் - மெக்சிகோ, பிரான்ஸ் - ஸ்பெயின், இங்கிலாந்து - ஜப்பான், மாலி - ஈராக் அணிகள் மோதுகின்றன.
தீபாவளி நாளான நாளை கானா -நைஜர், பிரேசில் -ஹோண்டுராஸ் அணிகள் மோதுகின்றன.