
வீரர்கள் மீது வெளிச்சம்
இந்தத் தொடர் மூலம் பல வீரர்களின் முகங்கள் மக்களுக்கு மேலும் நெருக்கமாகியுள்ளது. இதனால் வீரர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கிரிக்கெட் வீரர்களைப் போல தாங்களும் பிரபலமடைவோம் என்ற நம்பிக்கை அவர்களுக்கு வந்துள்ளது.

ஆட்டோகிராப் கேட்கும் அளவுக்கு
அஜய் தாக்கூர் என்ற வீரர் கூறுகையில், இப்போது எனது முகம் டிவியில் பளிச்சிடுகிறது. இது பெருமையாக உள்ளது. அதை விட என்நிடம் பலரும் குறிப்பாக குழந்தைகள் ஆட்டோகிராப் கேட்கிறார்கள். இன்னும் மகிழ்ச்சியாக உள்ளது என்றார் அவர்.

8 அணிகள்
இந்த உலக கபடி லீக்கில் மொத்தம் 8 அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் போல வீரர்களை ஏலத்தின் மூலம் தேர்வு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சாரு சர்மாதான் இந்தத் தொடரை ஏற்பாடு செய்து நடத்தி வருகிறார்.

ரசிகர்கள் உற்சாகம்
கபடிப் போட்டிகளுக்கு எப்போதுமே ரசிகர்களிடம் குறிப்பாக இளைஞர்களிடம் நல்ல ஆதரவு காணப்படும். அதிலும் கிராமப்புறங்களில் கபடிதான் நேஷனல் கேம் போல. எனவே இந்த உலக கபடித் தொடருக்கும் கூட நல்ல ஆதரவு காணப்படுகிறது.

டிவிட்டர் - பேஸ்புக் தூங்குதே
ஆனால் பேஸ்புக்கிலும் டிவிட்டரிலும் சகட்டுமேனக்கு பல தரப்பு விஷயங்களையும் அலசும் நம்மவர்கள், இந்த உலக கபடிப் போட்டித் தொடர் குறித்து எதுவுமே பேசாமல் அமைதியாக இருப்பது சாரு சர்மா உள்ளிட்ட போட்டி அமைப்பாளர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளதாம்.

கிரிக்கெட்டை விட பெரிய விளையாட்டு
உண்மையில் கிரிக்கெட்டை விட பிரபலமானது, பாரம்பரியமானது இந்த கபடி. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் என மொத்தம் 35 நாடுகளில் கபடி பிரபலமாக உள்ளது. கடந்த 1990ம் ஆண்டு முதல் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியதான் தொடர்ந்து 7 முறை தங்கப் பதக்கத்தைத் தட்டியது என்பது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications