For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் நம்பர் 1 மாரத்தான் வீரர் கெல்வின் கிப்டம் விபத்தில் மரணம்.. கென்யா மக்கள் சோகம்

நைரோபி : கென்யாவில் நடந்த விபத்தில் உலக சாதனை படைத்த மாரத்தான் வீரர் கெல்வின் கிப்டம் மற்றும் அவரது பயிற்சியாளரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. கென்ய நாடாளுமன்ற உறுப்பினர் கிடியோன் கிமையோ ட்விட்டரில் அவர்கள் இருவரின் மரணத்தை உறுதிப்படுத்தினார்.

கிமையோ தனது அறிக்கையில், "உலக மராத்தான் சாதனையாளரான கெல்வின் கிப்டம் மற்றும் அவரது பயிற்சியாளர் எல்டோரெட்-கப்டகாட் சாலையில் நடந்த ஒரு சோகமான விபத்தில் காலமானதை நாங்கள் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்" .

World Marathon record holder Kelvin Kiptum died in an accident

"கெல்வின் கிப்டம் அவரது தொழில் வாழ்க்கையில் முதன்மையானவர், தனது விளையாட்டில் அவர் ஒரு ஜாம்பவான். அவரது இழப்பு கடினமான ஒன்று. இந்த நம்பமுடியாத கடினமான நேரத்தில் எங்கள் எண்ணங்கள் அவர்களின் குடும்பத்தினருடன் உள்ளன. இந்த இழப்பால் கெய்யோ தெற்கு மக்கள் சோகத்தில் உள்ளனர். அவர்களின் ஆன்மா நித்திய சாந்தி அடையட்டும்" என குறிப்பிட்டு இருக்கிறார்.

24 வயதான கிப்டம் கடந்த ஆண்டு அக்டோபரில் சிகாகோ மாரத்தான் போட்டியில் இரண்டு மணி நேரம் 35 வினாடிகளில் போட்டி தூரத்தை கடந்து புதிய உலக சாதனை படைத்தார். அவர் 2023 இல் லண்டன் மாரத்தானை இரண்டு மணிநேரம், ஒரு நிமிடம் மற்றும் 25 வினாடிகளில் வென்று சாதனை படைத்து இருந்தார்.

லண்டன் மராத்தான் அமைப்பாளர்கள் ட்விட்டரில் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில், "மராத்தான் உலக சாதனையாளர் கெல்வின் கிப்டம் மற்றும் அவரது பயிற்சியாளர் கெர்வைஸ் ஹகிசிமானாவின் மரணம் குறித்த பயங்கரமான செய்தியைக் கேட்டு நாங்கள் அதிர்ச்சியும் ஆழ்ந்த வருத்தமும் அடைந்தோம்.

"டிசிஎஸ் லண்டன் மாரத்தானில் உள்ள அனைவரின் எண்ணங்களும் கெல்வின் மற்றும் கெர்வைஸின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உள்ளன." என குறிப்பிட்டு இருக்கின்றனர்.

உலக தடகளத் தலைவர் செப் கோ கூறுகையில், "கெல்வின் கிப்டம் மற்றும் அவரது பயிற்சியாளர் கெர்வைஸ் ஹக்கிசிமானாவின் பேரழிவுகரமான இழப்பை அறிந்து நாங்கள் அதிர்ச்சியும் ஆழ்ந்த வருத்தமும் அடைந்துள்ளோம்.

"உலக தடகளத்தில் உள்ள அனைவரின் சார்பாக, அவர்களது குடும்பத்தினர், நண்பர்கள், அணி வீரர்கள் மற்றும் கென்ய நாட்டிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

"இந்த வார தொடக்கத்தில் சிகாகோவில் தான், கெல்வின் தனது அசாதாரண மாரத்தான் உலக சாதனையை படைத்தார், அவருடைய வரலாற்று சாதனையை என்னால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க முடிந்தது. ஒரு நம்பமுடியாத தடகள வீரர் நம்பமுடியாத பாரம்பரியத்தை விட்டுச் செல்கிறார், நாங்கள் அவரை மிகவும் இழப்போம்." என்று கூறினார்.

அவர் 2024 ஏப்ரல் மாதம் ரோட்டர்டாம் மராத்தானில் பங்கேற்கவிருந்தார், இது உலக சாதனை படைத்த பிறகு அவரது முதல் நிகழ்வாக இருந்திருக்கும்.

Story first published: Monday, February 12, 2024, 10:02 [IST]
Other articles published on Feb 12, 2024
English summary
World Marathon record holder Kelvin Kiptum died in an accident
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+