
என்னதான் பிரச்சினை
கொரோனா தாக்கம் அதிகம் இருப்பதால் 2 தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டுவர்கள் மட்டுமே அந்நாட்டிற்குள் நுழைய வேண்டும் என்ற விதிகள் உள்ளன. ஆனால் தடுப்பூசிகளில் நம்பிக்கை இல்லாத ஜோகோவிச், மருத்துவ விதிவிலக்குடன் உள்ளே நுழைந்ததால் அவர் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டு நாடு கடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அவரின் விசாவை ஆஸ்திரேலியாவின் குடிபெயர்பு அமைச்சர் அலெக்ஸ் ஹாவ்கே ரத்து செய்தார்.

வழக்கு விசாரணை
இதனை எதிர்த்து ஜோகோவிச் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் சாதகமான தீர்ப்பே வந்தது. அவரின் விசா செல்லுபடியாகும் என்றும், அவரை ஆஸ்திரேலிய ஓப்பனில் கலந்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து அவருக்கு வரும் திங்கட்கிழமை அன்று முதல் சுற்றுப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மீண்டும் விசா ரத்து
இந்நிலையில் மீண்டும் ஜோகோவிச்சின் விசா ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள அமைச்சர் அலெக்ஸ் ஹாவ்கே, மருத்துவ ரீதியாக ஆபத்தை ஏற்படுத்த நினைத்த ஜோகோவிச்சின் விசாவை, எனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தியும், நாட்டின் பொது நலனுக்காகவும் ரத்து செய்கிறேன். இதுகுறித்து எல்லை பாதுகாப்புத்துறை அமைச்சகம், உள்துறை அமைச்சகம் என பல கட்ட ஆலோசனை நடத்தியே பின்பே எடுத்துள்ளேன் என அதிரடியாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

என்ன செய்யப்போகிறார்?
இந்த அறிவிப்பால் ஜோகோவிச் உடனடியாக ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேற வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார். 20 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றுள்ள ஜோகோவிச், தனது 21வது பட்டத்தை வெல்வதற்காக பெரும் சட்டப்போராட்டம் நடத்தினார். எனினும் அதன் பலனளிக்கவில்லை. இனிமேலும் அவர் மேல்முறையீடு செய்வாரா அல்லது வெளியேறுவாரா என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.


Click it and Unblock the Notifications