For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர் 2021க்கு தள்ளிவைப்பு.. காரணம் இதுதான்!

டெல்லி : இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடக்க இருந்த டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர் 2021க்கு தள்ளி வைக்கப்பட்டது.

Recommended Video

Ganguly Changed Indian Cricket Part 1 | Ganguly's Headingley Test win

இதுகுறித்து தொடரை நடத்த உள்ள காஸ்மோஸ் டென்னிஸ் மற்றும் சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

2020 டேவிஸ் கோப்பை தொடர் மாட்ரிட் நகரில் நடக்க இருந்தது. 2020, நவம்பர் 23 முதல் 29 வரை அந்த தொடர் நடக்க இருந்தது.

Davis Cup 2020 finals postponed to 2021

அந்த தொடரில் 18 நாடுகளை சேர்ந்த டென்னிஸ் அணிகள் பங்கேற்க இருந்தன. அந்த தொடர் திட்டமிட்டபடி நடந்தால் 90க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள், அவர்களின் உதவியாளர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் என பலரும் அந்த தொடரில் பங்கேற்பார்கள்.

ஆனால், தற்போது கொரோனா வைரஸ் பரவலால் பல நாடுகளும் பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டுள்ளன. சில நாடுகளில் உச்சம் பெற்றுள்ள கொரோனா வைரஸ், சில நாடுகளில் இப்போது தான் தாக்கத்தை துவக்கி உள்ளது.

இந்த நிலையில், பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களை ஒன்று திரட்டி இந்த தொடரை நடத்துவது சாத்தியமற்றது என முடிவு செய்துள்ளனர். அதை அடுத்து தான் தள்ளி வைக்கும் முடிவு எடுக்கப்பட்டது.

அடுத்த ஆண்டு நவம்பர் 22 முதல் துவங்கும் வாரத்திற்கு மாட்ரிட் நகரில் டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரை தள்ளி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, தேர்வான அதே 18 அணிகள் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட அதே டிராவில் பங்கேற்பார்கள் எனவும் அதிகாரிகள் விளக்கம் அளித்து இருக்கின்றனர். மாட்ரிட் நகர நிர்வாகமும் தள்ளி வைக்கும் முடிவை வரவேற்றுள்ளது.

Story first published: Saturday, June 27, 2020, 10:25 [IST]
Other articles published on Jun 27, 2020
English summary
Davis Cup 2020 finals postponed to November 2021 due to coronavirus pandemic.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+