இஸ்லாமாபாத்: பயிற்சிக்கு வராமல் மனைவி சானியா மிர்ஸாவுடன் லண்டனை சுற்றிப் பார்த்து பொழுதைப் போக்கியதற்காக கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிரடியாக நீக்கியுள்ளது.பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்து போயுள்ளது. அங்கு இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரில் அது பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் போட்டிக்காக பாகிஸ்தான் அணியினர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இதில் சோயப் மாலிக் பங்கேற்கவில்லை. மாறாக புது மனைவி சானியாவுடன் லண்டனை சுற்றிப் பார்த்து பொழுது போக்கியுள்ளார்.இதனால் அதிருப்தி அடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சோயப்பை முதல் டெஸ்ட் போட்டிக்கான அணியிலிரு்நது அதிரடியாக நீக்கியுள்ளது. மேலும், விளையாட்டில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் எனவும் அறிவுரை கூறியுள்ளது.கடந்த முறை ஆஸ்திரேலியாவுக்கு பாகிஸ்தான் அணி சென்றிருந்தபோது, ஒழுங்கீனமாவும், மோசமாக நடந்து கொண்டதற்காகவும் அணியிலிருந்து நீக்கப்பட்டவர் மாலிக் என்பது குறிப்பிடத்தக்கது.