
தங்க முடியாது
இந்த நிலையில் ஒலிம்பிக் கிராமத்தில் வைத்து புதிய பஞ்சாயத்து வெடித்ததாக செய்திகள் வெளியாகின. அங்கு லியாண்டரும், போபண்ணாவும் ஒரே இடத்தில் தங்குமாறு கூறப்பட்டுள்ளனர். ஆனால் அதை லியாண்டர் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. போபண்ணாவுடன் சேர்ந்து தங்க முடியாது என்று அவர் கூறியதாக தெரிகிறது.

அறை இல்லை
இதனால் லியாண்டருக்கு அறை ஒதுக்கப்படவில்லை. வேறு எந்த அறையும் அவருக்கு ஒதுக்கப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
பயஸ் விளக்கம்
இதுகுறித்து லியாண்டர் பயஸ் டிவிட்டரில் கூறியுள்ளதாவது: நான் போபண்ணாவுடன் தங்க மாட்டேன் என்று சொன்ன செய்தி பொய்யானது. எங்களை டென்னிஸ் போட்டிக்கு ஆயத்தமாவதை தடுக்கும் செயல்.

நிறுத்தனும்
நான் இப்போது ஒலிம்பிக் கிராமத்தில்தான் தங்கியுள்ளேன். எனவே செயற்கையாக உற்பத்தி செய்யப்பட்ட செய்திகளை இனிமேலாவது குறிப்பிட்ட மீடியாக்கள் நிறுத்த வேண்டும்.

வாழ்த்துக்கள்
நாட்டுக்காக முடிந்த அளவு சிறப்பாக ஆட தயாராகிவரும் எங்களுக்கு இதுபோன்ற செய்திகளால் கவன சிதறல் செய்ய வேண்டாம். இந்தியா சார்பில் பங்கேற்கும் அனைத்து வீரர், வீராங்கனைகளுக்கும், இந்த நேரத்தில் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.


Click it and Unblock the Notifications