சின்சினாட்டி : அமெரிக்காவில் நடந்து வரும் சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் காலிறுதிப் போட்டிகள் முடிவடைந்தன. இதன் முடிவில், முன்னணி வீரர்களான ரோஜர் பெடரர் மற்றும் நோவக் ஜோகோவிக் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
ஜோகோவிக் - கிரிகோர் டிமிட்ரோவ் ஆடிய மூன்றாவது சுற்றுப் போட்டி மோசமான வானிலை காரணமாக தடைப்பட்டு நேற்று மீண்டும் நடத்தப்பட்டது. அந்த ஆட்டத்தில் 2-6, 6-3, 6-4 என்ற செட்களில் வென்ற ஜோகோவிக், அடுத்த சில மணி நேரங்களில் காலிறுதிப் போட்டியில் பங்கேற்றார்.