ஹைதராபாத்: இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா நேற்று தனது 31வது பிறந்த நாளை கேக் வெட்டி குடும்பத்தினருடன் கொண்டாடினார்.
சானியா மிர்சாவுக்கு நேற்று 31வது வயது பிறந்தது. அவர் தனது பிறந்த நாளை குடும்பத்தினருடன் எளிய முறையில் கொண்டாடினார். பிறந்த நாள் ஆடையுடன் அவர் கேக் வெட்டிய காட்சியை இன்ஸ்டிராகிராமில் வெளியிட்டுள்ளார்.
ஆனால், இந்த நிகழ்வில் அவரது கணவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருமான சோயிப் மாலிக் பங்கேற்கவில்லை. இருப்பினும் சோயிப் மாலிக் டிவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
'பிறந்த நாள் காணும் எனது அழகிய மனைவிக்கு வாழ்த்துகள். இந்த தருணத்தில் அவருடன் இருக்க முடியாததை நினைத்து வருந்துகிறேன்' என்று வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.
கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா டிவிட்டரில், சானியா மிர்சாவை வாழ்த்தியுள்ளார்.
Happy birthday @mirzasania, your positive attitude and love for life has been instrumental in helping you shape such a successful tennis career and sail through all the ups and downs. Have a great one my friend!✌️🎂 pic.twitter.com/xwPLye7QY7
— Suresh Raina (@ImRaina) November 15, 2017