வரலாற்று போட்டி
நேற்று நடைபெற்ற இந்த முதலாவது சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- சானியா மிர்சா ஜோடி, மற்றொரு இந்திய இணையான ராம்குமார்-அங்கிதா ரெய்னாவை சந்தித்தது.
1968-ம் ஆண்டுக்குப் பிறகு கிராண்ட்ஸ்லாம் போட்டி ஒன்றில் முழுமையான இரு இந்திய ஜோடிகள் நேருக்கு நேர் மோதியது இதுவே முதல் முறை ஆகும்.
விறுவிறுப்பான போட்டி
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 6-2 எனக் கைப்பற்றிய சானியா - போபண்ணா ஜோடி, 2வது சுற்றில் சற்று விட்டுப்பிடித்தனர். டை பிரேக்கர் வரை சென்ற இந்த செட்டை 7-6 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியை 6-2, 7-6 என்ற நேர் செட் கணக்கில் சானியா - போபண்ணா ஜோடி வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறியது. ஏற்கனவே நடைபெற்ற பெண்கள் இரட்டையர் பிரிவில் சானியா - மெட்டெக் இணை, அலெக்ஸா குராச்சி-தேசிரே க்ராவ்சிக் இணையை 7-5, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வென்றது.
நீண்ட கால இடைவெளி
2017ஆம் ஆண்டில் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் பங்கேற்ற சானியா மிர்சா, அதன்பிறகு குழந்தை பிறப்பு காரணமாக விளையாட்டு போட்டிகளில் இருந்து விலகி இருந்தார். இந்நிலையில் ஒலிம்பிக் 2021-யை கருத்தில்கொண்டு தற்போது மீண்டும் டென்னிஸ் உலகிற்கு திரும்பியுள்ளார்.
முக்கியமான தொடர்
விம்பிள்டன் தொடர் சானியா மிர்சாவுக்கு மிகவும் முக்கியமான தொடராக பார்க்கப்படுகிறது. இதில் சானியா மிர்சா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிவிட்டால் ஒலிம்பிக் 2021-ல் இந்தியாவுக்கு ஒரு நம்பிக்கை கிடைத்து விடும். டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் 2021 மகளில் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியா சார்பாக சானியா மிர்சா-அங்கிடா ரெய்னா ஆகியோர் பங்கேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.