கலிபோர்னியா: பரிபாஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் இரட்டையர் இறுதிப் போட்டியில் இந்தியாவின் சானியா, ரஷ்யாவின் வெஸ்னினா ஜோடி தோல்வி அடைந்தது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள இண்டியன்வெல்ஸ் நகரில் பரிபாஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்றது. இதில் பெண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, ரஷ்யாவின் இலீனா வெஸ்னினா ஜோடி, அமெரிக்காவின் லீசல் ஹியூபர், லிசா ரேமண்ட் ஜோடியை எதிர் கொண்டது.
அமெரிக்க ஜோடி முதலில் இருந்தே அதிரடியாக விளையாடி போட்டியை எளிதாக வென்றது. முதல் செட்டில் சானியா, வெஸ்னினா ஜோடி 2-6 என்ற கணக்கில் இழந்தது. அதன்பிறகு 2வது சுற்றிலும் அமெரிக்கா ஜோடியிடம் 3-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது.
போட்டியின் இறுதியில் அமெரிக்காவின் லைசில் ஹியூபர், லிசா ரேய்மண்ட் ஜோடி 6-2, 6-3 என்ற நேர்செட்களில் வெற்றிப் பெற்றது. இறுதிப்போட்டி வரை முன்னேறிய சானியா, வெஸ்னினா ஜோடி தொடரில் 2வது இடத்தை பெற்றது.