For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒலிம்பிக்கில் பயஸுடன் விளையாட போபண்ணா மறுப்பு- இந்திய டென்னிஸ் சங்கம் மீது அமைச்சருக்கு கோபம்

By Mathi

டெல்லி: லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணியின் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் லியாண்டர் பயஸுடன் மகேஷ் பூபதி விளையாட மறுத்ததைத் தொடர்ந்து போபண்ணாவும் இன்று மறுப்பு தெரிவித்துள்ளார்.

லியாண்டர் பயஸுடன் விளையாட முடியாது என்று மகேஷ் பூபதி கூறியிருந்தார். இதற்கு இந்திய டென்னிஸ் கடும் ஆட்சேபனை தெரிவித்திருந்தது. பூபதி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பூபதியின் ஜோடியான போபண்ணாவும் பயஸுடன் விளையாட மறுத்திருக்கிறார். இதனிடையே விளையாட்டுத் துறை அமைச்சர் மக்கானுக்கு மகேஷ் பூபதி இன்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் இந்திய டென்னிஸ் அணி மீது புகார் வாசித்திருக்கிறார். மேலும் இந்த விவகாரத்தில் தலையிடுமாறும் அவரைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த சர்ச்சை நீடிப்பால் பயஸுடன் இணைந்து விளையாடப் போகும் வீரர் யார் என்பது கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.

இந்திய டென்னிஸ் சங்கம் ஒலிம்பிக் போட்டிக்கு ஒரு அணியை மட்டும் அனுப்ப முடியும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதற்கு அமைச்சர் மக்கான் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இந்தியா சார்பில் 2 அணிகள் பங்கேற்க முடியும் என்ற நிலையில் ஏன் டென்னிஸ் சங்கம் அடம்பிடிக்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Story first published: Monday, June 18, 2012, 18:22 [IST]
Other articles published on Jun 18, 2012
English summary
The sports ministry has lashed out at the All India Tennis Association for being adamant on sending one team for the men's doubles event at the London Olympics when India can send two teams.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+