
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் நேற்று டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவின் 2வது சுற்றில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், விஷ்ணுவர்தன் ஜோடி, பிரான்ஸின் ஜோ வில்பிரேட் சேங்கா, மைக்கேல் லோட்ரா ஜோடி எதிர்த்து விளையாடியது.
துவக்கம் முதலே இரு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இருப்பினும் முதல் செட்டை 6-7 என்று பிரான்ஸ் ஜோடி கைப்பற்றியது. அதன்பிறகு 2வது செட்டில் சிறப்பாக ஆடிய பிரான்ஸ் ஜோடி 6-4 என்ற கணக்கில் கைப்பற்றியது. 3வது செட்டில் இந்திய ஜோடி 6-3 என்ற செட் கணக்கில் கைப்பற்றியது.
போட்டியின் முடிவில் பிரான்ஸ் ஜோடி 6-7, 6-4, 3-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. இதனால் இந்தியாவின் பயஸ்-விஷ்ணுவர்தன் ஜோடி ஒலிம்பிக் போட்டியில் இருந்து வெளியேறியது.
முன்னதாக இந்தியாவின் மற்றொரு ஜோடியான மகேஷ் பூபதி, ரோகன் போப்பண்ணா ஜோடி தோல்வி அடைந்து வெளியேறியது. லியாண்டர் பயஸூக்கு கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா உடன் களமிறங்க உள்ளார்.
லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய டென்னிஸ் அணியின் தேர்வின் போது, லியாண்டர் பயஸ் உடன் ஜோடி சேர மகேஷ் பூபதி மறுப்பு தெரிவித்தார். இதனால் லியாண்டர் பயஸ் உடன் விஷ்ணுவர்தன் ஜோடி சேர்க்கப்பட்டார். மேலும் மகேஷ் பூபதி உடன் ரோகன் போப்பண்ணா ஜோடி சேர்க்கப்பட்டார். தற்போது இரு அணிகளும் ஒலிம்பிக் போட்டியில் தோல்வியை தழுவி வெளியேறி உள்ளது.