டோகியோ: பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா அதிர்ச்சி தோல்வியடைந்தார்.இந்திய டென்னிஸின் நம்பிக்கை நட்சத்திரமாக ஒளிர்ந்த சானியா மிர்சா சமீபகாலமாக சொல்லி கொள்ளும்படி செயல்படவில்லை.அவர் நேற்று ஜப்பான் தலைநகர் டோகியோவில் நடந்த பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் தொடரில் கலந்து கொண்டார். முதல் சுற்று போட்டியில் அவர் சீனாவின் ஜி ஜெங்குடன் மோதினார்.இதில் சானியா முதல் செட்டை 7-5 என வென்றார். ஆனால், அடுத்த இரண்டு செட்களையும் பரிதாபமாக இழந்தார். இறுதியில் 7-5, 2-6, 3-6 என்ற செட்களில் தோற்று, தொடரிலிருந்து வெளியேறினார் #13;