பட்டாயா: பட்டாயா ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றுப்போட்டியில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா கடும் போராட்டத்துக்கு பின் வெற்றி பெற்றார்.தாய்லாந்தின் பட்டாயா நகரில் உலகின் முன்னணி வீராங்கனைகள் விளையாடும் பட்டாயா ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடக்கின்றன. நேற்று நடந்த முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, தாய்லாந்து வீராங்கனை நிஜா லெர்பிடாக்சின்சாயை எதிர்கொண்டார்.எதிரே களமிறஙகிய வீராங்கனை தரவரிசையில் 945வது இடத்தில் இருப்பதால் சானியா எளிதாக வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சானியாவுக்கு தாய்லாந்து வீராங்கனை கடும் சவால் கொடுத்தார்.இறுதியில் சானியா கடும் போராட்டத்துக்கு பின் 7-6, 7-5 என்ற செட்களில் வென்று, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். #13;