For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒலிம்பிக் டென்னிஸ்: வெளிச்சமின்மையால் கலப்பு இரட்டையரில் பயஸ்-சானியா போட்டி தள்ளிவைப்பு

By
Paes and Sania Mirza
லண்டன்: லண்டன் ஒலிம்பிக்கில் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-சானியா மிர்சா ஜோடி கலந்து கொண்ட காலிறுதி போட்டி வெளிச்சம் இன்மை காரணமாக பாதிக்கப்பட்டது. இதனால் மீதமுள்ள போட்டி இன்று நடைபெற உள்ளது.

லண்டன் ஒலிம்பிக் போட்டியின் டென்னிஸ் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-சானியா மிர்சா ஜோடி, பெலாரஸ் நாட்டின் மேக்ஸ் மிர்னியி, விக்டோரியா அசாரென்கா ஜோடி உடன் மோதியது.

இதில் முதல் செட்டியில் இரு ஜோடியினர் இடையே கடும் போட்டி நிலவியது. ஒரு கட்டத்தில் 5-5 என்ற சம புள்ளிகளை பெற்றனர். ஆனால் 47 நிமிடங்கள் தொடர்ந்த இப்போட்டியில் சிறப்பாக ஆடிய பெலாரஸ் ஜோடி முதல் செட்டை 5-7 என்ற கணக்கில் கைப்பற்றியது.

2வது செட்டிலும் இரு ஜோடிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடின. பெலாரஸ் ஜோடி 2வது செட்டில் 2-3 என்ற முன்னிலை பெற்ற நிலையில் ஆடுகளத்தின் வெளிச்சம் பாதிக்கப்பட்டது. இதனால் மேற்கொண்டு போட்டியை நடத்த முடியாமல், நடுவர்களால் நிறுத்தப்பட்டது. மீதமுள்ள போட்டி இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

Story first published: Saturday, August 4, 2012, 11:42 [IST]
Other articles published on Aug 4, 2012
English summary
The mixed doubles quarterfinal match between India’s Leander Paes and Sania Mirza and their Belarussian opponents was postponed till Saturday because of fading light at the Wimbledon courts in London.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+