
இது தொடர்பாக வெஸ் பயஸ் கூறுகையில், டென்னிஸ் சங்கத்தின் முடிவை லியாண்டர் ஏற்றுக் கொள்ளாமலும் போகலாம். லியாண்டரிடம் இந்த முடிவு தெரிவிக்கப்படவில்லை. தற்போது லண்டனில் உள்ள லியாண்டர் தூங்கிக் கொண்டிருப்பார். அவர் எழுந்து பதில் கூறுவதற்காக காத்திருக்கிறோம். லியாண்டர் பிடிவாதக்காரர். ஒருமுறை முடிவெடுத்துவிட்டால் அதை மாற்றிக் கொள்வது மிகவும் கடினம் என்றார் அவர்.
2 அணிகளை அனுப்பினால் நிச்சயம் தாம் ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணிப்பேன் என்று பயஸ் நேற்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.