லண்டன்: லண்டனில் இன்று நடை பெற உள்ள கடைசி ஆட்டத்திற்கான டிக்கெட் சுமார் 31 லட்ச ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளதாம். இதுவரை இவ்வளவு விலைக்கு எந்தப் டென்னிஸ் போட்டி டிக்கெட்களும் விற்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து தகவல் தெரிவித்துள்ள வியாகோகோ டிக்கெட் ஏஜன்சி, ' லட்சக் கணக்கான மக்கள் டிக்கெட் வேண்டி எங்களது ஆன்லைன் டிக்கெட் பதிவு மையத்தை அணுகுகிறார்கள். ஆனால், அவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சுகிறது. அவர்கள் டிக்கெட் ஒன்றிற்கு கிட்டத்தட்ட 16 லட்ச ரூபாய் வரை தர தயாராக இருப்பது எங்களுக்கே ஆச்சரியமாக உள்ளது' எனத் தெரிவித்துள்ளது.
இன்றைய போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ஸ்மைல் பிங்கி கதாநாயகி பிங்கி தான் டாஸ் போடப் போகிறார் என்பது தனிச்சிறப்பு. மேலும், ஆட்டத்தில் பங்கு பெறப் போகும் வீரர்களை சந்திக்கும் வாய்ப்பையும் பிங்கி பெற்றுள்ளார். பிங்கி ஆட்டத்தை நேரடியாக கண்டு களிக்கும் வகையிலும், வீரர்களோடு அமர்ந்து உணவருந்தும் வகையிலும் போட்டி அமைப்பாளர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.