
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் பேரன் வருண் வைகோ. இவர், தேசிய மற்றும் மாநில அளவில் நடந்த பல்வேறு டென்னிஸ் போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றி வாகை சூடி வருகிறார்.
தற்பொழுது, சிபிஎஸ்இ பள்ளியில் படிக்கும் 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு, அகில இந்திய அளவில் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்றன.
இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் மாணவர்கள் ஆர்வத்துடன் வந்து இந்த போட்டியில் கலந்து கொண்டு விளையாடினார்கள். தென் மண்டல அளவில் நடைபெற்ற இப்போட்டியில் கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா போன்ற மாநில மாணவர்களுடனும் வருண் விளையாடினார். இந்த போட்டியில் வருண், தென்னிந்தியாவில் முதலாவதாக வந்து வெற்றி பெற்றிருக்கிறார்.