விம்பிள்டன்
இந்த தொடருக்கான அரையிறுதி போட்டிகள் நேற்று நடைபெற்றன. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் அரையிறுதி போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரும் நடப்பு விம்பிள்டன் சாம்பியனுமான நோவக் ஜோகோவிச் (செர்பியா), கனடாவை சேர்ந்த டெனிஸ் ஷபோவலோவுடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 7-6, 7-5, 7-5 என்ற கணக்கில் நோவக் ஜோகோவிச் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இறுதிப்போட்டி
செர்பியாவை சேர்ந்த வீரரான ஜோகோவிச் நுழையும் 30வது கிராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டி இதுவாகும். இதுவரை 19 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ள ஜோகோவிச், இந்த முறையும் வெற்றி பெற்று 20வது முறையாக மகுடம் சூடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
2வது அரையிறுதி
நேற்று நடைபெற்ற மற்றொரு அரையிறுதிப்போட்டியில் உலகின் 7-ம் நிலை வீரரான இத்தாலியைச் சேர்ந்த மேட்டியோ பெரெட்டினி, போலந்தின் ஹூபர்ட் ஹர்காசை ஆகியோர் மோதினர். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த ஹூபர்ட், 6-3, 6-0, 6-7, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.
Recommended Video
4 முறை சாம்பியன்
நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் ஜோகோவிச், மேட்டியோ பெரெட்டினி ஆகியோர் மோதுகின்றனர். நடப்பாண்டில் ஆஸ்திரேலிய, பிரெஞ்ச் ஓபன் தொடர் என ஏற்கனவே பட்டம் வென்றுள்ள ஜோகோவிச், தற்போது விம்பிள்டன் தொடரிலும் இறுதிப்போட்டிக்கு நுழைந்துள்ளார். அடுத்து வரும் யுஎஸ் ஓபன் தொடரிலும் பட்டம் வென்றுவிட்டால் ஒரே ஆண்டில் 4 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற வீரர் என்ற பெருமையை பெறுவார்.