For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக சாம்பியன்ஷிப் டென்னிஸ்: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது போபண்ணா இணை

By Karthikeyan

லண்டன்: லண்டனில் நடைபெற்று வரும் உலக சாம்பியன்ஷிப் டென்னிஸ் போட்டியில், இந்தியாவின் போபண்ணா இணை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

8 முன்னணி வீரர்கள் மற்றும் 8 முன்னணி ஜோடிகளுக்கு இடையிலான உலகச் சாம்பியன்ஷிப் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.

World Championship Tennis: Bopanna progressed to the finals

இரட்டையருக்கான அரையிறுதிப் போட்டியில் 8-ம் நிலை ஜோடியான ரோகன் போபண்ணா (இந்தியா)- புளோரின் மெர்கேயா (ரொமேனியா) ஜோடி இவான் டோடிக் (குரோஷியா)- மாரிசெலோ மெலோ (பிரேசில்) ஜோடியை எதிர்கொண்டது.

ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா, ருமேனியாவின் ஃப்ளோரின் மெர்ஜியாவுடன் இணைந்து ஆடி வருகிறார். இந்த ஜோடி அரையிறுதி ஆட்டம் ஒன்றில், குரோஷியாவின் இவான் டோடிக் மற்றும் பிரேசிலின் மார்செலோ மெலோ, இணையுடன் மோதியது.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் போபண்ணா இணை, 6-4, 6-2 என்ற கணக்கில் நேர் செட்டில் வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

உலக ஆடவர் சாம்பியன்ஷிப் டென்னிஸ் போட்டியில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில், தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள வீரர்கள் மட்டும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றனர்.

Story first published: Saturday, November 21, 2015, 22:40 [IST]
Other articles published on Nov 21, 2015
English summary
India's Rohan Bopanna and Romanian Florin Mergea entered the London Final
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+