For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அதிரடி ஆட்டம்... இறுதிப் போட்டியில் பி.வி.சிந்து.. இந்தியாவுக்கு 2வது மெடல் ரெடி!

By Mathi

ரியோ: ரியோ ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் அரையிறுதி ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி இந்தியாவின் பி.வி. சிந்து வெற்றி பெற்றார்.

பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோவில் 31-வது ஒலிம்பிக் போட்டிகள் நடக்கிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் காலிறுதி ஆட்டத்தில் உலக சாம்பியனான சீன வீராங்கனை வாங் யுஹானை எதிர்கொண்ட பி.வி.சிந்து, 22-20, 21-19 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

PV Sindhu vs Nozomi Okuhara

இன்று நடந்த அரையிறுதி அரையிறுதி போட்டியில் தரவரிசையில் 10-ம் இடத்தில் உள்ள பி.வி.சிந்து, 6-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நோசோமி ஓகுராவை எதிர் கொண்டார். ரசிகர்களின் கரகோஷங்களுக்கிடையே கடும் சவாலை எதிர்கொண்ட சிந்து முதல் செட்டை 21-19 என கைப்பற்றினார்.

அடுத்த செட்டில் ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய சிந்து, மிக எளிதாக ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி 21-10 என கைப்பற்றினார். இதனால் ரியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதன் மூலம் இந்தியாவிற்கு இரண்டாவது பதக்கம் கிடைப்பது உறிதியாகியுள்ளது.

Story first published: Thursday, August 18, 2016, 21:43 [IST]
Other articles published on Aug 18, 2016
English summary
India's hope for a second medal at the Olympics rest on the shoulders of young badminton player PV Sindhu.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+