
ஐசிசி கோப்பை கனவு
இந்த வெற்றிகள் மூலம் இந்தியாவின் ஐசிசி கோப்பை கனவு அதிகரித்துள்ளது. 2013ம் ஆண்டுக்கு பிறகு ஒரு ஐசிசி கோப்பையை கூட வெல்லாமல் உள்ள இந்திய அணிக்கு இந்த முறை 2 வாய்ப்புகள் உள்ளன. அதாவது இன்னும் ஒரு டெஸ்டில் வெற்றி பெற்றால் கூட டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறிவிடும். இதே போல 50 ஓவர் உலகக்கோப்பையும் இந்தியாவில் தான் நடைபெறவுள்ளது.

கவாஸ்கர் பேச்சு
இந்நிலையில் இந்த இரண்டையும் வென்றுக்கொடுக்க வேண்டும் என சுனில் கவாஸ்கர் கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஒரு அணி சாம்பியன் பட்டத்தை வென்று மகிழ்ச்சியில் இருந்தால் அதில் நாமும் இருக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். ஒரு கேப்டனாக ரோகித் சர்மா சிறப்பான ஃபார்மில் விளையாடி வரும் போது தான் அனைத்துமே சரியான பாதையில் செல்கிறது என்பது தெரியவரும்.

2 ஆசைகள்
இந்திய அணி 2 கோப்பைகளை வெல்ல வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன். அதில் முதலாவது விஷயம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர், 2வது ஒருநாள் கிரிக்கெட் தொடராகும். இடையில் ஆசிய கோப்பை தொடரும் வரவுள்ளது. அதனையும் இந்தியா வென்றுவிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும் என கவாஸ்கர் கூறியுள்ளார்.

சிறப்பான ஃபார்ம்
இந்திய அணியை பொறுத்தவரையில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்டோர் உச்சகட்ட ஃபார்மில் இருக்கின்றனர். பந்துவீச்சில் முகமது சிராஜ், முகமது ஷமி உள்ளிட்டோரும் கலக்கி வருகின்றனர். எனவே இந்த முறை மிஸ்ஸே ஆகாது என்பது போல தீவிரமாக தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











