
2 அணிகள்
முதலில் இது சாத்தியமா என்று பார்ப்போம். மாற்றம் ஒன்று தான் மாறாதது. என் வேலையை செய்ய எனக்கு 2 கைகள் பத்தவில்லை என்று பலர் கூறி பார்த்து இருப்போம். அதே போல் தான் இந்தியா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை பங்கேற்க இனி ஒரு அணி போதாது. ஐபிஎல் போட்டிகள் மூலம் தற்போது பல்வேறு இளம் வீரர்கள் நமக்கு கிடைத்துள்ளனர்.

பழைய முறை
இதனால், ஒரே நேரத்தில் 2 இந்திய அணிகளை தயார் செய்து அனுப்புவதில் எவ்வித சிக்கலும் இருக்காது. அவ்வளவு ஏன் ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பு கூட இந்திய டெஸ்ட் அணிக்கு ஒரு வீரர்கள் என்றும், ஒருநாள் அணிக்கு ஒரு வீரர்கள் என்றும் இரு அணிகள் இருக்கும். ஆனால் டெஸ்ட் போட்டி முதலில் நடைபெற்று பிறகு ஒருநாள் போட்டி நடைபெறும்.

இங்கிலாந்து அணி
தற்போது, ஒரே சமயத்தில் 2 அணிகள் வேவ்வெறு நாடுகளில் மோதும் வகையில் அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது, இதனை இங்கிலாந்து ஏற்கனவே தொடங்கிவிட்டது. தற்போது இங்கிலாந்து அணி நியூசிலாந்தில் எதிர்கொள்கிறது, அதே வேலையில் தற்போது இங்கிலாந்து ஒருநாள் அணி நெதர்லாந்துடன் ஒரே சமயத்தில் மோதுகிறது.

வரமா? சாபமா?
இது தான் தற்போது இந்தியாவிலும் நடைபெறுகிறது. ஒரு அணி, அயர்லாந்துடன் டி20யில் மோதும், அதே நேரத்தில் மற்றொரு அணி டெஸ்ட் போட்டியில் மோதும். நாளடைவில் ஒரு இந்திய அணி காலையில் டெஸ்ட் போட்டியிலும், மாலை நேரத்தில் மற்றொரு அணி டி20 போட்டியிலும் மோதும் நிலை ஏற்படலாம். இது நிச்சயம் வரம் என்றே சொல்ல வேண்டும். வாயப்புக்காக காத்திருக்கும் வீரர்களுக்கு இத வரப்பிரசாதமாக அமையும்.


Click it and Unblock the Notifications











