டாஸ்
இந்த நிலையில், டாஸ் வென்ற கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். பனிப் பொழிவு காரணமாக இந்த முடிவை எடுத்ததாக குறிப்பிட்டார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றி இந்திய அணியின் உத்வேகத்தை அதிகரித்துள்ளதாக குறிப்பிட்ட ரோகித், வெற்றி தொடரும் என நம்புகிறேன் என்றார்.
மாற்றம்
இந்திய அணியில் இன்றைய ஆட்டத்தில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. புவனேஸ்வர் குமார், ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு இந்த தொடரில் ஓய்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் , தீபக் சாஹர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதே போன்று பும்ராவுக்கு திடீரென்று உடல் நலம் சரியில்லாததால், அவருக்கு பதில் ஆர்ஸ்தீப் சிங் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பெவுமா கருத்துஇதே போன்று சாஹலுக்கு பதிலாக அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பேசிய தென்னாப்பிரிக்க கேப்டன் பெவுமா, தாமும் பந்துவீச தான் இருந்தேன். 2 மாதம் காயத்திற்கு பிறகு அணிக்கு திரும்பியுள்ளேன். டி20 உலகக் கோப்பைக்கு முன் நடைபெறுவதால் இது எங்களுக்கு முக்கியமான தொடர் என்று அவர் கூறினார்.
இதே போன்று சாஹலுக்கு பதிலாக அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பேசிய தென்னாப்பிரிக்க கேப்டன் பெவுமா, தாமும் பந்துவீச தான் இருந்தேன். 2 மாதம் காயத்திற்கு பிறகு அணிக்கு திரும்பியுள்ளேன். டி20 உலகக் கோப்பைக்கு முன் நடைபெறுவதால் இது எங்களுக்கு முக்கியமான தொடர் என்று அவர் கூறினார்.
இந்தியா பிளேயிங் லெவன்
1, ரோகித் சர்மா, 2, கேஎல் ராகுல், 3, விராட் கோலி, 4, சூர்யகுமார் யாதவ், 5, ரிஷப் பண்ட், 6, தினேஷ் கார்த்திக், 7, அக்சர் பட்டேல், 8, தீபக் சாஹர், 9, அஸ்வின், 10, ஹர்சல் பட்டேல், 11,ஆர்ஸ்தீப் சிங்