
பேட்டிங் குறை
ஒரு டெஸ்டில் தோல்வியை தவிர்க்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 90 ஓவர்களுக்கு மேல் பந்தை எதிர்கொண்டு விளையாட வேண்டும். இல்லையனில் முதல் இன்னிசில் குறைந்தபட்சம் 300 ரன்களை எடுக்க வேண்டும். இந்தூர் டெஸ்ட்டில் புஜாராவை தவிர வேறு எந்த ஒரு வீரரும் அரைசதம் கூட அடிக்கவில்லை. தொடக்க வீரர்களான ரோகித்தும், சுப்மன் கில்லும் சொதப்புகிறார்கள்

விராட் கோலி
அதிரடியாக ஆடுகிறேன் என்ற ரோஹித் சர்மாவும் சொற்ப ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வருகிறார். இந்திய பேட்டிங் வரிசையின் முதுகு எலும்பான விராட் கோலி கடந்த 10 இன்னிங்ஸ்களாக ஒரு முறை கூட அரை சதமே அடிக்கவில்லை. அவர் மட்டும் கொஞ்சம் நிலைத்து நின்று இருந்தால், இந்திய அணியின் தோல்வி தவிர்க்கப்பட்டு இருக்கும்.

வீரர்கள் மாற்றம்
விக்கெட் கீப்பராக களமிறங்கியுள்ள கேஎஸ் பரத் பேட்டிங்கில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால், கடைசி டெஸ்டில் இஷான் கிஷனை ரோகித் சர்மா பயன்படுத்தலாம். இல்லையெனில் அக்சர் பட்டேலுக்கு அதிக ஓவர்கள் வழங்கும் விதமாக, ஒரு வேகப்பந்துவீச்சாளரை நீக்கிவிட்டு, கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனுடன் இந்திய அணி களமிறக்கலாம்.

நோ பால்
இதே போன்று பந்துவீசும் முறையிலும் கொஞ்சம் மாற்றம் தேவை. குறிப்பாக நோ பால் வீசுவதை தவிர்க்க வேண்டும். நோ பாலால் எவ்வளவு பெரிய தாக்கம் ஏற்பட்டது என்பதை இந்திய ரசிகர்கள் கண் கூடாக பார்த்து விட்டார்கள். இதே போன்று டிஆர்எஸ் முறையை தேவையின்றி வீணடிக்காமல் ரோகித் சர்மா சரியாக பெயன்படுத்த வேண்டும்.


Click it and Unblock the Notifications











