
பாகிஸ்தான் போட்டி
இரு அணிகளும் மோதும் இந்த போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்பேர்ன் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு போட்டி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த டி20 உலகக்கோப்பையில் பெற்ற தோல்விக்கு பதிலடி கொடுக்க இந்திய அணியும், இந்தியாவுடனான ஆதிக்கத்தை தொடர பாகிஸ்தான் அணியும் முனைப்புடன் களமிறங்கவுள்ளன.

அதிர்ச்சி தகவல்
இந்நிலையில் இந்த தரமான மோதலை எதிர்பார்த்திருந்த கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி ஒன்று கிடைத்துள்ளது. அதாவது ஆஸ்திரேலியாவில் திடீரென வானிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறும் அக்டோபர் 23ம் தேதி தான் நல்ல பாதிப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மழைக்கான வாய்ப்பு
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அந்நாட்டு வானிலை ஆய்வு மையம், இந்தியா - பாகிஸ்தான் போட்டியின் போது 95% சதவீதம் அளவிற்கு மழை பொழிவுக்கான வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதுவும் மதியம் மற்றும் மாலை நேரங்களில் கனமழையையே எதிர்பார்க்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

ஐசிசி விதிமுறை
டி20 உலகக்கோப்பையில் மழைக்குறுக்கிட்டால், முடிவை பெறுவதற்கு குறைந்ததற்கு 5 ஓவர்களாவது வீசப்பட வேண்டும் என்பது விதி. லீக் சுற்றில் ரிசர்வ் நாளும் இல்லை என்பதால் போட்டி தான் முழுவதும் ரத்து செய்யப்படும். எனவே வானிலை கொஞ்சமாவது இறக்கம் காட்ட வேண்டும் என ரசிகர்கள் வேண்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications