
மெய்மறந்து ரசனை
அவர்கள் விளையாட்டு போட்டியை பார்த்து, மெய்மறந்து அதன் பின்னாடியே செல்லும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அப்படி தான் நேற்றைய இறுதி போட்டியில் சென்னை தோல்வி அடைந்ததை ஏற்க முடியாத தீவிர சிறுவன் ஒருவன் பண்ணும் அலப்பறையை பாருங்கள்.

இறுதிக்கட்ட காட்சிகள்
அந்த சிறுவன் கையில் ரிமோட்டுடன் மேட்சை பார்த்துக் கொண்டிருக்கிறான். 20வது ஓவரில் கடைசி பந்தை மலிங்கா வீச, தாகூர் தமது விக்கெட்டை இழக்கிறார். டிவியில் அந்த காட்சிகள் ஓடுகின்றன. சென்னை தோல்வி அடைகிறது.

அழுது, உருளும் சிறுவன்
அதை ஜீரணிக்க முடியாத அந்த சிறுவன்... அய்யோ.... அய்யோ... மம்மி... மம்மி என்று கதறி அழுதபடி நேராக தரையில் விழுகிறான். பின்னர் எழுந்து பிதற்றிய படியே சில அடி தூரம் முன்னோக்கி செல்கிறான்.

சிறுவன் அழுகை
பின்னர் மீண்டும் எழுந்து... தோல்வியை தாங்க முடியாமல் அய்யோ... மம்மி என்று குதியாட்டம் போடுகிறான். நேராக சில அடி தூரம் வேகமாக ஒடும் அவன் திரும்பி வந்து தலையில் அடித்துக் கொண்டு கதறி அழுகிறான்.

வளரும் தலைமுறை
அப்போது அருகில் வரும் பெண்மணி ஒருவர் வந்து அதட்டல் போட... அதையும் கண்டு கொள்ளாமல் கதறி அழுகின்றான். தோல்வியை ஏற்றுக் கொள்ளாமல் வெம்பி அழும் இந்த இளம் தலைமுறைகளை என்னவென்று சொல்வது?


Click it and Unblock the Notifications











