தடைக்காலம் முடிகிறது
பான்கிராப்ட்க்கு தடைக் காலம் முடிந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்தார். இந்நிலையில் ஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோரின் தடைகாலம் வரும் 29ம் தேதியோடு முடிவடைகிறது.
பல முயற்சிகள்
இதனையடுத்து இருவரையும் உலக கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் சேர்க்க பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கு முன்பாக அவர்கள் ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளனர்.
விளையாட தடை
ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த ஸ்மித் கடந்தாண்டு விளையாட வில்லை. அவருக்கு பதிலாக ரகானே கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
கேப்டன் ரகானே
அவர் தலைமையிலான ராஜஸ்தான் அணி ப்ளே ஆப் சுற்று வரை சென்றது. அதேபோல், நடப்பு சீசனிலும் ரகானே கேப்டனாக தொடருவார் என்று அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
வரவேற்பு
இந்நிலையில், ஸ்மித் மற்றும் வார்னர் ஆகிய இருவரும் அவரவர் அணியில் இணைந்து கொண்டனர். ராஜஸ்தான் அணியில் இணைந்த ஸ்மித்துக்கு அணி நிர்வாகம் உற்சாக வரவேற்பு அளித்தது.
|
தலைப்பாகை அணிவிப்பு
வார்னருக்கு பொன்னாடை போர்த்தப்பட்டது. அதே நேரத்தில், ஸ்மித்துக்கு தலைப்பாகை அணிவித்தும் ஹல்லா போல் ஸ்டீவ் என்று குரல் எழுப்பியும் வரவேற்றனர்.