தீவிர பயிற்சியில் இங்கிலாந்து வீரர்கள்
அக்டோபர் 17 அன்று நடைபெற உள்ள மூன்றாவது ஒருநாள் போட்டிக்காக தயாராகி வருகிறது இங்கிலாந்து அணி. இதற்காக, இங்கிலாந்து வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர்.
|
மைதானத்திற்குள் பாம்பு
அப்போது அந்த மைதானத்திற்குள் பாம்பு ஒன்று வந்துள்ளது. நல்ல வேளையாக யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படும் முன், அந்த பாம்பை கண்டுபிடித்து விட்டனர். அந்த பாம்பை ஊழியர்கள் பிடிக்கும் காட்சியை இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு இணையத்தில் பகிர்ந்துள்ளது. அந்த பதிவில் "இன்று காலை பயிற்சிக்கு வந்த திடீர் பார்வையாளர்.." என குறிப்பிட்டுள்ளது
மழையால் ஏற்படும் தடை
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் முதல் போட்டி மழையால் தடைபட்டது. மழையால் ஓவர்கள் குறைக்கப்பட்ட இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அடுத்த போட்டி வரும் அக்டோபர் 17 அன்று நடைபெற உள்ளது.
ஜீப் சவாரி செய்த வீரர்கள்
முன்னதாக முதல் போட்டி மழையால் தடைபட்ட பின்னர், இங்கிலாந்து வீரர்கள் இலங்கையில் உள்ள தேசிய பூங்காவிற்கு சென்று ஜீப் சவாரி செய்து காட்டு விலங்குகளை கண்டு ரசித்தனர்.
[மழையா கெடக்கு.. மேட்ச் நடக்க மாட்டேங்குது.. காட்டுக்குள்ள ஜீப் சவாரி போகப் போறோம்]