
சொதப்பிய தோனி மற்றும் அணி
பரபரப்பாக நடந்து முடிந்துள்ள ஐபிஎல் 2020 சீசனில் சிஎஸ்கே தனது வழக்கமான சிறப்பான ஆட்டத்தை பதிவு செய்யவில்லை. மாறாக 14 போட்டிகளில் 6ல் மட்டுமே வெற்றி பெற்று ப்ளே-ஆப் சுற்றிற்கும் தகுதி பெறாமல் தொடரிலிருநது வெளியேறியது. கேப்டன் தோனியும் சிறப்பாக விளையாடவில்லை.

தோனி உறுதி
இந்நிலையில் தான் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்பேன் என்று தோனியும் அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசனும் உறுதியுடன் தெரிவித்துள்ளனர். அவர் அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று நம்பப்படுகிறது.

மீண்டும் ஏலத்தில் எடுக்க வேண்டும்
தோனி அடுத்த ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அவரை அணியில் தக்க வைக்காமல், விடுவித்து, மீண்டும் ஏலத்தில் எடுக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இதன்மூலம் 15 கோடி ரூபாய் செலவழிக்க வேண்டிய நிலை ஏற்படாது என்றும் அவர் கூறினார்.

சிஎஸ்கேவிற்கு அவசியம்
மேலும் அவ்வாறு சேமிக்கப்படும் தொகையை கொண்டு, பல சிறப்பான வீரர்களை அணியில் இணைக்க முடியும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். அணியின் ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோரின் இருப்பும் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், தற்போதைய சூழலில் சிஎஸ்கே அணிக்கு மெகா ஏலம் மிகவும் அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











