
விராட் கோலி சொன்ன கருத்துகள்
நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த விராட் கோலி, தனக்கும் ரோகித் சர்மாவுக்கும் எந்தவித மனக்கசப்புகளும் இல்லை என்றும் இதனை கடந்த இரண்டரை வருடமாக தொடர்ந்து கூறிக்கொண்டே தான் இருப்பதாக தெரிவித்தார். மேலும் பிசிசிஐ சார்பில் என்னிடம் யாருமே பதவி விலக வேண்டாம் என்று கோரவில்லை எனவும் வெளிப்படையாக கூறினார். இதனால் கங்குலி கூறிய கருத்துக்கள் பொய்யா?, உண்மையில் பிரச்சினை யாருக்கு தான் என பல்வேறு கருத்துக்கள் சமூக வலைதளங்களில் உலா வருகிறது.

தலையிட்ட ஜடேஜா
இந்நிலையில் தான் தற்போது ரவீந்திர ஜடேஜா போட்டுள்ள ட்வீட்கள் ஒன்று புதிய குழப்பத்தை உருவாக்கியுள்ளது. முதல் ட்வீட்டில் அவர், " போலியான நண்பர்கள் தான் வதந்திகளை நம்புவார்கள், உண்மையான நண்பர்கள் உன்னை தான் நம்புவார்கள்" என பதிவிட்டுள்ளார். இதன் மூலம் ரோகித் சர்மா- விராட் கோலி இடையே எந்தவித பிரச்சினை இல்லை என்பதை ஒரு அணி வீரராக ஜடேஜா தெரிவித்திருப்பதாக தெரிகிறது.

திடீர் குழப்பம்
ஆனால் மற்றொரு ட்வீட்டின் மூலம் தனது சொந்த பிரச்சினைக்காக தான் கருத்து தெரிவித்துள்ளாரா என்று குழப்பம் எழுந்துள்ளது. அதாவது நியூசிலாந்து தொடரின் போது ஜடேஜாவுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்திலும் இடம்பெறவில்லை. அவரின் காயத்தின் தன்மை பெரிதாக இருப்பதால் இனி டெஸ்ட் போன்ற நீண்ட தொடர்களில் விளையாடாமல் ஓய்வு பெற போவதாக தகவல் வெளியானது.

இரண்டாவது ட்வீட்
இந்த தகவல்கள் உண்மை இல்லை என்பதை தெளிவுப்படுத்த முடிவெடுத்த ஜடேஜா, தான் டெஸ்ட் அணி உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, இன்னும் நீண்ட தூரம் போக வேண்டியுள்ளது என்ற வாசகத்தை குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் அவர் ஓய்வு பெறவில்லை என்பது உறுதியாகியுள்ளது. எனினும் முதல் ட்வீட்டில் கோலி பிரச்சினையை குறிப்பிட்டாரா அல்லது சொந்த பிரச்சினையை குறிப்பிட்டாரா என்று கேள்விகள் உலா வருகின்றன.


Click it and Unblock the Notifications