அரையிறுதிக்கு முன்னேற்றம்
பிறகு 315 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வங்கதேசம் 48 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்களை மட்டுமே எடுத்தது. 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா, அரையிறுதிக்கு முன்னேறியது.
பாராட்டு
இந்நிலையில், வங்கதேச அணியையும், அந்த அணியின் போராட்ட குணத்தையும் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் மனதார பாராட்டி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
போட்டிகளில் சிறப்பு
நடப்பு உலக கோப்பை தொடரில் வங்கதேச அணி சிறப்பாக விளையாடி உள்ளது. இந்தியாவுக்கு எதிரான ஒரு போட்டியில் மட்டுமல்ல. அவர்கள் அனைத்து போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.
தொடரின் சிறந்த அணி
இன்னும் சொல்லப்போனால், நான் பார்த்ததில்லையே வங்கதேச அணி இந்த தொடரில் மிகச் சிறப்பாக ஆடி வருகிறது. அவர்கள் எந்த அணியையும் எதிர்த்து வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு இறுதிவரை போராடுகின்றனர். அவர்களின் இந்தப் போராட்ட குணம், மிகவும் பிடித்திருக்கிறது. அந்த அணி வீரர்களுக்கு வாழ்த்துக்கள் என்றார்.