
உண்மையான ஐபிஎல்
இந்த நிலையில் சென்னை அணியில் முக்கிய வீரரான அம்பத்தி ராயுடு ரசிகர்களுக்கு வாக்குறுதி ஒன்றை அளித்துள்ளார். அதில் இந்த சீசன் தான் உண்மையான ஐபிஎல் ப இருக்கிறது. ஐபிஎல் தொடரில் எப்போதும் நாங்கள் ஒரு மைதானத்தில் இருந்து இன்னொரு மைதானத்திற்கு பயணம் செய்து கொண்டே இருப்போம். இப்போது பயோ பபுலும் இல்லை. இதை நினைக்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

நம்பிக்கை
கடந்த சீசனில் 14 போட்டிகளில் வெறும் நான்கு ஆட்டத்தில் மட்டுமே வெற்றி பெற்றோம். ஒரு மோசமான சீசனில் இருந்து தற்போது விளையாட வந்திருக்கிறோம். இதுவே நாங்கள் சிறப்பாக விளையாட எங்களுக்கு ஒரு உத்வேகத்தை கொடுக்கும். இம்முறை நாங்கள் சரியான முறையில் திட்டமிட்டு இருக்கிறோம். கடந்த முறை செய்த தவறை இம்முறை நாங்கள் நிச்சயமாக சரி செய்வோம்.இந்த சீசன் எங்களுக்கு நிச்சயமாக ஒரு நல்ல சீசனாக அமையும் என்று அம்பத்தி ராயுடு கூறியுள்ளார்.

பேட்டிங்கில் எந்த இடம்
அம்பத்தி ராயுடு கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு சையது முஸ்தாக் போன்ற தொடர்களில் விளையாடினார். இதனால் அவருடைய பார்ம் கேள்விக்குறியாக இருக்கும். 37 வயதான அம்பத்தி ராயுடு, அணியில் தொடக்க வீரராக களம் இறங்குவாரா? இல்லை நடுவரசையில் விளையாடுவாரா? என்று சந்தேகம் நிலவுகிறது.ராயிடுவோம் தோனியும் தங்களது பழைய பார்மை வெளிப்படுத்தினால் நிச்சயமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அது பெரும் பலமாக இருக்கும்.

ஓய்விலிருந்து திரும்பினார்
கடந்த சீசனில் ராயுடு 13 போட்டிகளில் விளையாடி 274 ரன்கள் தான் அடித்தார் இதில் ஒரு அரை சதம் மட்டும் அடங்கும் சராசரியாக 24 ரன்கள் சேர்த்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஏற்பட்ட மன வருத்தம் காரணமாக தொடரிலிருந்து பாதியில் ஓய்வு பெறுவதாக ராயுடு அறிவித்தார்.
எனினும் அதனை சிஎஸ்கே அணி நிர்வாகம் ஏற்கவில்லை. இதை அடுத்து சிஎஸ்கே அணி நிர்வாகம் நடத்தும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து ராயுடு அணியில் தொடர்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











